பொன்னமராவதி பேரூராட்சியில் ‘‘நம்ம செஸ்; நம்ம பெருமை’’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் பரிசுகளை வழங்கினார். செயல் அலுவலர் மு.செ.கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பொது சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.