districts

சாதனையாளர்களுக்கு  விருது வழங்கும் விழா

அறந்தாங்கி, மே 12-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்றது.  இந்திய மருத்துவர் கழக செயலாளர் டாக்டர் இப்ராம்ஷா தலைமை வகித்தார். கராத்தே கன்னையன். கவிஞர் கவிவர்மன், வர்த்தக சங்க பேரவை மாவட்டத் தலைவர் வரதராஜன், சேதுராமன், நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் டாக்டர் தெட்சிணா மூர்த்தி தொடக்க உரையாற்றினார். ஐஏஎஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சசிகாந்த் செந்தில் துவக்கி வைத்தார். அமைப்பின் 17-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 11 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சி.ஜே.ஆர்.மணி நல்லாசிரியர் விருதும், சமூக நலத்தோடு செயலாற்றி வரும் 21 இளைஞர்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனை யாளர் விருதும், திசைகள் அமைப்பைச் சேர்ந்த 5 உறுப்பி னர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. 

;