புதுக்கோட்டை, ஏப்.8- புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட் டையில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 645 காளைகள் பங்கேற்றன. மருத்துவப் பரிசோ தனைக்கு உட்படுத்தட்பட்ட 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியினை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றிபெற்ற காளைகளுக் கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 42 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.