districts

வலையபட்டி மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் மாதர் சங்கம் வலியுறுத்தல்

பொன்னமராவதி, செப்.25 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள வலையபட்டியில் அரசின் தாலுகா தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. பொன்னமராவதி பகுதிகளில் இருந்து, இங்கு வரும் ஏழை-எ ளிய மக்கள் பேருந்துகளையே நம்பி  இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ மனை அருகில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து கள் நிற்காமல் செல்வதால் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர்.  இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சுசீலா தலைமையி லான நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மருத்துவ மனை அருகில் நின்று செல்ல உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கூடுதலாக செவிலியர் மற்றும் மருத்துவர்களை நிய மிக்க வேண்டி அக்டோபர் முதல் வாரத்தில் பொன்னமராவதி ஒன்றியம் முழுவதும் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப் படும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒன்றிய நிர்வாகிகள் மதியரசி, ரேவதி, மணிமேகலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;