அறந்தாங்கி, மார்ச் 29- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவணத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவை தமிழக சுற்றுச்சூழல் கால நிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி, நல்லாசிரி யரும் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான நா.சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணிகருணாநிதி, அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சரிதா மேகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.