புதுக்கோட்டை, ஏப்.10 - மதிமுக வேட்பாளர் துரை.வைகோ வுக்கு வாக்குக் கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதி முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இருசக்கர வாகனப் பிரச்சாரம் புதன்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது.
‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளராக துரை.வைகோ போட்டியிடுகிறார். இவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு வகைகளில் தொகுதி முழுவதும் தொடர்ந்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அதனொரு பகுதியாக புதன்கிழமை, கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதி முழுவதும் இரண்டு பகுதிகளாக 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
எம்.சின்னதுரை எம்எல்ஏ.,
அன்னவாசல் ஒன்றியம் நார்தா மலையில் தொடங்கிய பிரச்சா ரத்திற்கு, கட்சியின் குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித் தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பின ரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கொடியசைத்து பிரச்சா ரத்தைத் தொடங்கி வைத்ததோடு, அவ ரும் வாகனப் பேரணியில் பங்கேற்றார்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.தங்கவேல், பி.சுசிலா, அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, மூத்த தோழர் எஸ்.பீமராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
அண்டக்குளம், கிள்ளனூர், வீரக்குடி, கீரனூர், கிள்ளுக்கோட்டை, குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், மின்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர் களின் வழியாக சென்ற பேரணி, கந்தர் வகோட்டையில் நிறைவடைந்தது.
கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் மணமடையில் தொடங்கிய பேரணிக்கு, ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து தலை மை வகித்தார். பேரணியை கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தொடங்கி வைத்தார். திமுக ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல் (கந்தர்வகோட்டை தெற்கு), ஜி.பன்னீர் செல்வம் (கந்தர்வகோட்டை வடக்கு), மாவட்டக்குழு உறுப்பினர் துரை.அரி பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை விடுதி, செங்கமேடு, குழந்திரான் பட்டு, தீத்தான்விடுதி, கறம்பக் குடி, பிலாவிடுதி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம், தட்டாமனைப்பட்டி, நாயக்கர்பட்டி, புனல்குளம், மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி வழி யாக வந்த பேரணி, கந்தர்வ கோட்டையில் நிறைவடைந்தது.
தொடர்ந்து மாலையில், கந்தர்வகோட்டை பேருந்து நிலை யம் அருகில் மாபெரும் தேர்தல் பிரச்சா ரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.