districts

img

மாணவர்களுக்கு உடை வழங்கிய எய்டு இந்தியா எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு

புதுக்கோட்டை, ஜன.14-  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எய்டு இந்தியா  நிறுவனத்தின் சார்பில் சனிக் கிழமை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வண்ண உடைகள் வழங்கப் பட்டன. எய்டு இந்தியா நிறுவ னத்தின் சார்பில் 35 பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவி களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண உடைகள் மற்றும்  மருத்துவ மாணவருக்கு செல்போன், ஸ்டெதஸ் கோப், கல்வி உதவித் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி புதுக் கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் எஸ்.கவிவர்மன் தலைமை  வகித்தார். நலத்திட்ட உதவி களை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத் துரை வழங்கினார்.  அப்போது எம்.சின்னத் துரை பேசுகையில், ‘‘எய்டு  இந்தியா நிறுவனம் சமூக த்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும், மிக வும் பின்தங்கிய குடும்பங் களில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கும் ஏராள மான நலத்திட்ட உதவி களைச் செய்து வருகிறது. குறிப்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏராளமான குடும்பங்களுக்கு இலவச வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறது. மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி  வருகிறது. இத்தகைய பணி கள் மிகவும் பாராட்டுக்குரி யது’’ என்றார். எய்டு இந்தியா நிறுவ னத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சி.ராஜா வர வேற்க, யுரேகா வட்டாரப் பயிற்சியாளர் அன்பு கிளாடி யஸ் நன்றி கூறினார். இந்திய  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த் தனன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

;