districts

img

கந்தர்வக்கோட்டை தொகுதியை கல்விக் கோட்டையாக மாற்ற நடவடிக்கை எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., தகவல்

புதுக்கோட்டை, நவ.3-  கந்தர்வக்கோட்டை தொகுதி யை கல்விக் கோட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  எம்.சின்னதுரை எம்எல்ஏ தெரி வித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு பெண்  கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திரு விழா போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் எஸ்.மணிவண்ணன் தலைமை வகித்தார்.  கலைத்திருவிழா போட்டியை தொடங்கி வைத்து கந்தர்வக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசு கையில், ‘‘அரசு பெண்கள் மேல்  நிலைப் பள்ளி மாணவிகளின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் கந்தர்வக்கோட்டை தொகுதி நிதி ரூ.3 லட்சத்தில் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்படும். கந்தர் வக்கோட்டை தொகுதியில் கடந்த ஆண்டு 11 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. நிக ழாண்டு 11 பள்ளிகளில் ஏற்படுத்தப் பட உள்ளது. படிப்படியாக தொகு தியில் உள்ள அனைத்து அரசுப்  பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்  கொள்ளப்படும்.  மேலும், கல்வியால் பெருமை  கொள்ளும் அளவுக்கு பள்ளிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப் படும். இதன் மூலம் கந்தர்வக் கோட்டை தொகுதியை கலைக் கோட்டையாக மட்டும் அல்ல; கல்விக் கோட்டையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். விழாவில், மாவட்டக்கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட முதன்  மைக் கல்வி அலுவலக பள்ளித்  துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, புதுக்கோட்டை பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, ஒன்றி யக் குழுத் தலைவர் ரெத்தின வேல்கார்த்திக், கந்தர்வக் கோட்டை வட்டாரக் கல்வி அலுவ லர் நரசிம்மன், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.