districts

img

எம்.சின்னதுரை எம்எல்ஏவின் கோரிக்கை ஏற்பு

புதுக்கோட்டை, மார்ச் 16- கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்  பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை யின் கோரிக்கையை ஏற்று, சீர்மரபின ருக்கு ஒரே சான்றிதழ் வழங்கி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சீர்மரபினருக்கு Denotified Communities (DNC) மற்றும் Denotified Tribes (DNT) என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக, தமிழகத்தில் டிஎன்டி (DNT) என்ற பிரிவின்கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கையை சீர்மரபினர் முன்வைத்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப் பரம்  பரைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பி னர் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டு, எம்.பி.சி பிரிவின்கீழ் இடஒதுக்கீடு வழங் கப்பட்டு வருகிறது. குறவர் சமூகத்தில் 28 சமூகப் பிரிவுகள், மறவர் சமூகத்தில் 6 பிரிவுகள், கள்ளர் சமூகத்தில் 3 பிரிவுகள், ஊராளி கவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர் வேட்டுவ கவுண்டர் என மொத்தம் 68 சமூகங்கள் சீர்மரபினர் என்ற பிரி வின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு ‘டிஎன்சி’ என சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேசமயம், ஒன்றிய அரசின்கீழ் டிஎன்சி பிரிவு இல்லாததால், ஒன்றிய  அரசின் திட்டங்களில் உதவி பெறுவதற்கு  சீர்மரபினர் பிரிவில் உள்ள மக்களுக்கு ‘டிஎன்டி’ எனும் சாதிச் சான்றிதழ் வழங்கப்  படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒரு சான்றிதழ், மாநில அரசில் ஒரு சான்றிதழ் என இரண்டு சான்றிதழ்கள் சீர்மரபினருக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு இரண்டு சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ள தால், ஒரே சாதிச் சான்றிதழ் வழங்கி இட  ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண் டும் என்பது சீர்மரபினரின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை வலியுறுத்தி, சீர்மரபினர் நலச் சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில் பலமுறை போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இட ஒதுக்கீட்டில்  கல்வி, வேலைவாய்ப்பில் இரண்டு தலை முறையைச் சேர்ந்த 68 சமூக இளை ஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வகுடி மக்களாக உள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்காததால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்த லின்போது, திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கையை நிறைவேற்றித் தருவ தாக தமிழ்நாடு முதலமைச்சர், சீர்மரபி னர் நலச் சங்கத்தினரிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.

எம். சின்னதுரை எம்எல்ஏ தலையீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்ன துரை இக்கோரிக்கை குறித்து சட்டப்பேர வையில் வலியுறுத்திப் பேசினார். மேலும்,  கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நாகைமாலியுடன் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மனுக் கொடுத்தும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி னார்.

இதில் உள்ள சட்ட சிக்கலைத் தீர்த்து,  டிஎன்டி சான்றிதழ் வழங்க உதவிடுமாறு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகு பதியை, சீர்மரபினர் சங்க நிர்வாகிகளுடன்  சென்று சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றி தழ்கள் வழங்குவதற்கு பதிலாக, டிஎன்டி  (Denotified Tribes - DNT) என ஒரே சான்றி தழ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன்படி வருவாய் அலுவலர்கள் இனி சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள். இதன் மூலம் இரட்டை சான்றிதழ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி
இதுகுறித்து கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை கூறுகையில், “எனது கோரிக்கையை ஏற்று சீர்மரபினரின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றி இந்த உத்தரவை பிறப்பித்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் சீர்மரபினர் இரட்டை சான்றி தழ் பெற அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. 

இந்த உத்தரவு மூலம் சீர்மரபினர் ஒன்றிய அரசின் திட்டங்களில் உதவிபெறு வதற்கும், உயர்கல்வி பெறுவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் பேருதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகங்களில் ஒன்றான சீர்மரபினரின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியது மிகவும்  மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.