districts

அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் வனச்சரகர் உட்பட 5 பேர் கைது

உதகை, டிச.31- நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மத்திய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங் கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வன சரகர் உள்பட 5 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான 234 ஏக்கர் வனப் பகுதி உள்ளது. இதில், ஒன்றிய அர சின் கட்டுப்பாட்டில் உள்ள மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப் படையில் இயங்கி வருகிறது. இந்நிலை யில், ஒன்றிய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் பகுதியில் மழை மற் றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த மரங் களை அகற்ற வேண்டும் என்று மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதி காரி கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து வனத்துறை அதி காரியின் பரிந்துரை கடிதம் உள்ளிட்ட அரசு விதிகள்படி மரங்களை வெட்டிக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே கண்ணன் கடந்த செப் டம்பர் மாதம் நீண்ட விடுமுறையில் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மழைக்கு கீழே விழுந்த மரங்கள் மட்டும் அல்லாமல், காப்புக்காடு பகுதி யில் இருந்த மற்ற மரங்களையும் அனு மதியின்றி வெட்டி கடத்தியுள்ளனர்.  காப்புக்காட்டில் இருந்த 370 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு உள் ளது. இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகளும், ஒன்றிய மண் மற்றும்  நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலரும், தனியார் காண்டிராக்டர் ஒருவரும் ஈடுபட்டு உள்ளனர்.

ஆராய்ச்சி மைய அதிகாரிகளுக்கும் சிக்கல்

இதற்கிடையே கடத்தல் சம்பவத்தில் ஒன்றிய மண் வள ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைமையகத்திற்கு வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிலர் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து சென்றுள்ளனர். அவர்கள் வந்த பின்னர் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

விடு முறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்த  கண்ணன் இது குறித்து கேள்விப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்து மாறு வனத்துறை அலுவலகம் மற்றும் உதகை புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கள் நடத்திய விசாரணையில் ரூ.48 லட் சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட் டுள்ளதாக மதிப்பிடப்பட்டது. இந்த நிலையில் வனச்சரகர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி,  வேட்டை தடுப்பு காவலர் தேவேந்தி ரன், தற்காலிக தோட்ட பராமரிப்பாளர் நாகராஜ் உள்பட 5 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 379 (திருட்டு), 120 (பி), (சதி செயலுக்கு உடந்தை) 420 (ஏமாற்றுதல்), ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது  செய்யப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கடந்த வாரம் வனச் சரகர் நவீன் குமார் உட்பட 3 பேர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது. இதற்கு இடையே வனச்சர கர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனத்துறை யினர் 50க்கும் மேற்பட்டோர் உதகை காந்தல் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.