நாமக்கல், மே 15- அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எருமப்பட்டி ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேருந்து நிலையத்தில் 3 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப் பறை, கோபுர விளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் கட்டிடத்தின் உறுதி தன் மையை ஆய்வு செய்ய கோரியும், கடை களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் கேட்டும் கண்களில் கருப்பு துணியை கட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எருமப் ்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு நிர்வாகி பிரபு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் எஸ்.கே.சிவச்சந்திரன், ஒன்றிய குழு எஸ்.சசிக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் மு.து.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். இறுதியாக ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெய ராமன், கதிர்,கவின், பார்த்திபன்,சுரேஸ், கார்திக்,சரவணன், முருகன் உள்ளிட்டு, வாலிபா் சங்க தோழர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்ட னர்.