districts

img

கனமழையில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருச்செங்கோட்டில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையில் நீருக்குள் சிக்கிய மாற்றுத்திறனாளி நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகர பகுதிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று பெய்த மழையின் அளவு 135 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது . நேற்று நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சின்னதெப்பக்குளம் பின்புறம் பள்ளமான பகுதியில் உள்ள டயர் கடைகளுக்குள்  மழை நீர்  சூழ்ந்தது. மழைக்காக  அங்கு ஒதுங்கி  இருந்த மாற்றுத்திறனாளி மாரிமுத்து 50 என்ற நபர் மழை நீருக்குள் சிக்கித் தவித்த நிலையில் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.