districts

img

கிராம சாலையை சீரமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

கிராம சாலையை சீரமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டம்  கொல்லிமலை சேலூர் நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி கிராம வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.. இந்த சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேஷன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். ஆர்ப்பாட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலை பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மலைவாழ் சங்க நிர்வாகிகள், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் என வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்