districts

img

புதுச்சத்திரத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் பகுதியில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தை நடத்தினர்.  
பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க வேண்டும்; அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும் வேலை  செய்தவர்களுக்கான சம்பளத்தை மாதம் தோறும் பாக்கி இல்லாமல் வழங்கிட வேண்டும்; மாநிலத்தில் வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனையும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டாவும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் கட்சியின் முன்னாள் ஒன்றில் செயலாளர் பி. ஜோதிமணி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி ஒன்றிய செயலாளர் எஸ்.பெரியசாமி மாவட்ட குழு உறுப்பினர் பி ராணி, ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். நடேசன் ஆர்.லட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.