districts

img

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் வாக்குப்பதிவு மையம் மாறுதலால் ஏமாற்றம்

நாகர்கோவில், பிப்.19- நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்கும் வகை யில் பட்டியலில் குளறுபடி செய்யப்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. மாநகராடசியின் 2 ஆவது வார்டான சுங்கான் கடை அரசுப்பள்ளியின் எதிரில் உள்ள வீட்டில் வசிக்கும் சாந்தாபாய் என்பவது வாக்கு மட்டும்  ஆளுரில் உள்ளது. இதுபோல் பலரது பெயர் கள் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்கும் வகை யில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முன்னதாகவே இவற்றை கண்டறிந்து அதிகாரிகளிடம் கேட்டபோத இம்முறை ஏதும் செய்வதற்கில்லை என தெரிவித்துள்ளனர். 26-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் தற்போது பால்குளம் பகுதியில் வசித்து வரு கிறார்கள்.  கடந்த சட்டசபை தேர்தலில் இவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி யில் வாக்களித்தனர். தற்போது உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சதாவதானி செய்கு தம்பிப் பாவலர் பள்ளியில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு வந்தனர். அப்போதுவாக்குச் சாவடியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு வாக்கு இல்லை என்று திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்த வேட்பாளர்கள்  அதிகாரிகளின் கவனத்திற்கு  கொண்டு சென்றனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் வாக்களிக்க அனு மதிக்கப்பட்டனர்.  வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க கூட்டம் அலை மோதியது. வாக்குச்சாவடிக்கு வெளியே பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை அங்கிருந்த காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.