ஆசிரியையிடம் 2 பவுன் நகை பறிப்பு
நாகர்கோவில், ஏப்.2- தக்கலை அருகே பள்ளியாடி முருங்கவிளை பகுதி யைச் சேர்ந்தவர் ஹெலன் மேரி பிரேமா. (வயது40.) இவர் தக்கலை பகுதியில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஆசி ரியையாக பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு தக்கலையில் இருந்து இருசக்கர வாக னத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இவரை பின்தொடந்து வந்து கொண்டி ருந்தனர். இதை கண்ட பிரேமா தனது வாகனத்தை வேக மாக ஒட்டி சென்றார். உடனே அந்த வாலிபர்கள் விரட்டி சென்று குழிக்கோடு பகுதியில் மடக்கினர். அதிர்ச்சி அடைந்த பிரேமா சத்தம் போடவே மர்ம நபர்கள் பிரேமா வின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். பலத்த போராட்டத்தில் செயினை பறிக்க முடியாததால் பிரேமாவின் கையில் கிடந்த 2 பவுன் கை செயினை பறித்துவிட்டு பிரேமாவை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி களை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி இஸ்ரோ சாதனை
பெங்களூர், ஏப்.2- இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமா னப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உய ரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ண யித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது. செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடு களுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவும் கால விரயம் தடுக்கப்படும். இதன்மூலம் மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஸ்மார்ட்சிட்டி பணிகள்: கனிமொழி எம்.பி. ஆலோசனை
தூத்துக்குடி, ஏப்.2- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஸ்மாட் சிட்டி பணிகளின் தற் போதைய நிலை குறித்து நகர ஆலோசனைக் குழு வினர்களுடனான கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்.கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அருகில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனை வர் லோக.பாலாஜி சர வணன், தூத்துக்குடி மாநக ராட்சி ஆணையர் .ச. தினேஷ் குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் .ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.