districts

நாகர்கோவில் மாநகராட்சி பட்ஜெட் ரூ.2 கோடியே 84 லட்சத்துக்கு பற்றாக்குறை

நாகர்கோவில், மார்ச் 31 நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் 2023- 24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன் சில் கூட்டமும் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநக ராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், முத்து ராமன், செல்வகுமார் கவுன்சி லர்கள் டி. ஆர். செல்வம், ஸ்ரீலிஜா,  அனிதா சுகுமாரன், மீனாதேவ் , நவீன் குமார், உதயகுமார் மற்றும் பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  2023 -24-ஆம் நிதியாண் டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் மகேஷ் பேசியதாவது:-  மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் அத்தியா வசிய வசதிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை கட்டுதல், குடிநீர் வினி யோகம் ஆகியவற்றிற்கு அனை த்து வார்டுகளுக்கும் சமமாக முக்கி யத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு  போன்ற பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும். சாலைகள் மேம்பாட்டிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. குடிநீர் பிரச்சி னையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 93 சதவீத பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது.  நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதையடுத்து பேருந்து நிலை யங்களை மேம்படுத்தவும் நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளோம். வடசேரி  பேருந்து நிலையம், அண்ணா பேருந்து  நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. பாதாள சாக்க டை திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின் றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளி லும் தூய்மை பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பொதுமக்களி டமிருந்து குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகு தியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகிய வற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதா ரங்களை பலப்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சி செயல் படுகிறது. மக்களுக்கு தேவை யான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டு ரூ.234.98  லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூல மாக ரூ.17 கோடியை 67 லட்சம் நிதி கிடைக்கிறது. வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும் குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியை 91 லட்சமும் செலவா கிறது. மொத்தம் ரூ.255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பட்ஜெட் பற்றாக்குறை  பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.