நாகர்கோவில்,ஜன.25- கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்பமை தேவை களை பூர்த்தி செய்ய வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மண் சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீரத்தேக்க தொட்டி களை முறையாக சுத்தம் செய்து அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், தரமான சாலை, தெ ருவிளக்கு மற்றும் கழிவுநீரோடை வசதிகள் கேட்டு பலமுறை மனுகொடுத்தும், கிராமசபைக் கூட்டங்களில் வலியுறுத்தியும் கோரிக்கைகளை நிறைவேற் ்றாத நிலையில் ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து செவ்வாயன்று ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராஜாக்கமங்கலம் வட்டார செயலாளர் எஸ்.ற்றி.ராஜகுமார் தலைமை வகித்தார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், வட்டாரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பிரசாத், ஆர்.குமரேசன், எஸ்.மிக்கேல் நாயகி ஆகியோர் பேசினர். மனோ கரன், கோபாலன், பபிதா, அர விந்த், தங்கப்பன், ஜானகி, வைகுண்ட பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.