வேதாரண்யம், மே 29 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வடமழை ஆலமரம் பேருந்து நிலையம் அருகில் திருத்து றைப்பூண்டியில் இருந்து கரியாப்பட்டினத்திற்கு பால் ஏற்றி வந்த டாடா ஏஸ் வாக னம் மின்சார கம்பத்தில் மோதியது. இதனால் வடமழை மணக்காடு, கரியாப்பட்டி னம், தென்னம்புலம், செட்டி புலம், மருதூர், வடக்கு மஞ்சகன்னி, தென்னம்புலம், செண்பகநல்லூர், கத்தரிப் புலம் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர். இந்த விபத்து குறித்து கரி யாப்பட்டினம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், மின்கம் பம் மோதி விபத்து ஏற்பட்ட போது, சைக்கிளில் வந்த தம்புசாமி (60) என்ற முதிய வர் காயமடைந்து திருவாரூர் மாவட்ட தலைமை மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பகுதியில் 10 மணி நேர த்திற்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது.