districts

img

வண்டலூர் இ.மாரிமுத்து கல்வெட்டு திறப்பு விழா

நாகப்பட்டினம், டிச.2- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில் தோழர்  இ.மாரிமுத்து படத்திறப்பு மற்றும் கல்வெட்டு திறப்பு விழா கிளைச் செயலாளர் டி.பக்கிரி சாமி தலைமையில் நடைபெற்றது.  கீழ்வேளூரை அடுத்த வண்டலூர் ஊராட்சியை சேர்ந்த இ.மாரிமுத்து நவம்பர்  11 அன்று காலமானார். இவர் வண்டலூர் ஊராட்சியில் இரண்டு முறை ஊராட்சி மன்ற  தலைவராக பதவி வகித்தவர். இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விதொச ஒன்றிய தலைவ ராக பணியாற்றி வந்தார்.  அவரது உருவப் படத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக்  குழு உறுப்பினருமான வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து கொடியினை ஏற்றி வைத் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். முருகையன் கல்வெட்டை திறந்து வைத்தார்.  கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என். எம்.அபுபக்கர். தெற்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.முத்தையன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் டி.துரைராஜ்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

;