நாகப்பட்டினம், நவ.3 - நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக் கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஏராள மான வெளிநாட்டு பறவைகள் வந்துள் ளன. இதை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கோடி யக்கரையில் அமைந்துள்ள வனமும், அதன் அருகில் அமைந்துள்ள பறவை கள் சரணாலயமும் மிக முக்கியமான தாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணா லயத்திற்கு வருவது வழக்கம். சைபீரியா, ஈரான், இராக், இமாச்சலப் பிரதேசம், இலங்கை உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இருந்து பறவைகள் வந்த வண்ணம் உள்ளன. கொசு உள்ளான், கூழைக்கடா, செங்கால் நாரை, ரஷ்ய சிறவி, இலங்கையின் கடல் காகம், கோடியக்கரை பறவைகள் சரணா லயத்திற்கு என்றே புகழ்பெற்ற (பிள மிங்கோ) பூநாரை உள்ளிட்ட பறவைகள் இந்த வருட வலசையை அழகுபடுத்தி இருக்கின்றன. வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனத்தில் புள்ளிமான், குரங்கு, முயல், காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வரு கின்றன. வங்கக் கடலின் கரையில் அமைந்துள்ள இந்த வன உயிரின காப்பகம், சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. அமரர் கல்கி எழு திய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் பூங்குழலி என்ற கதாபாத்திரம் கோடியக் கரை பகுதியில் களமாடுவதாக அங்குள்ள பகுதிகளை வர்ணித்து எழுதி இருப்பார். அருண்மொழி தேவன் கோடியக்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு செல்வ தாக அப்பகுதி அமைந்திருக்கும். சிதில மடைந்த நிலையில் கடற்கரையோரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது.
இது மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கலங் கரை விளக்கமாக கருதப்படுகிறது. இந்த வனத்தில் இருக்கும் குதிரைகள் பிரிட்டி ஷார் காலத்தில், அவர்களின் போக்கு வரத்திற்காக கொண்டு வரப்பட்டதாக கரு தப்படுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பின் பிரிட்டிஷ் அதிகாரிகள் அக்குதிரைகளை, அந்த அடர் மிகுந்த வனத்தில் விட்டுச் சென்றதாக கூறுகிறார்கள். உப்பு உற்பத்தியில் தமிழகத்தின் இரண்டாவது இடமாக கருதப்படும் கோடி யக்கரை உப்பள பகுதி, சுமார் 10,000 ஏக்கர் உப்பு விளையும் பகுதியாக உள் ளது. வடகிழக்கு பருவமழை துவங்கிய பிறகு உப்பு உற்பத்தி மழையின் காரண மாக தடைபட்டாலும் ஏற்கனவே எடுக்கப் பட்ட உப்புகள் உப்பளத்தின் கரைகளில் மலை போல் குவிக்கப்பட்டு அம்பாரம் இடப்பட்டிருப்பது தொழிலாளர் வர்க்கம் சோர்வில்லாமல் உழைத்ததற்கு சான் றாக இருக்கிறது. இதன் மூலம் 5000 முதல் 8000 உப்பளத் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். உப்பு வயல்களில் சேகரிக்கப்பட்ட உப்பு கள், பிரமிடுகள் வடிவத்தில் குவிக்கப் பட்டு அதன் மீது தற்போது நீல வண்ணத் தால் ஆன பாலித்தீன் பைகளால் மூடப் பட்டிருந்தாலும், மரபின் நீட்சியாக ஒரு சில இடங்களில் பனை மரத்தின் ஓலை களைக் கொண்டு உப்பு அம்பாரங்களை மூடியிருப்பது, உப்பளத்தின் நடுவில் பனை ஓலையால் வேயப்பட்ட மிகப் பெரிய கூரை வீடு ஒன்று இருப்பது போல் காட்சியளிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உப்பு சத்தியாகிரகத்தின் நினைவுத்தூண் அகஸ்தியம்பள்ளி ரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.
சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வீரர்கள் சிறை வைக்கப்பட்ட வர லாற்று சுவடுகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் உப்பின் மீது செலுத்தி இருந்த ஆதிக் கத்தையும், உழைக்கும் வர்க்கத்தின் ரத்தத்தை உப்பின் வழியே உறிஞ்சி குடித்த பிரிட்டிஷ் உப்பு கம்பெனிகளின் தடங்கள் குட்டிச்சுவராய் இடிந்துகிடக்கின்றன. இந்தியாவில் இருக்கிற சதுப்பு நிலப் பகுதிகளில் கோடியக்கரை சதுப்பு நில பகுதி மிக முக்கியமான பகுதியாக கருதப் படுகிறது. உலகின் தலைசிறந்த சதுப்பு நில பகுதிகளுக்கு வழங்கப்படுகிற ‘ராம்சார் அந்தஸ்து’ பெற்ற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக விளங்குகிறது இந்த கோடி யக்கரை. தமிழகத்தின் கிழக்கு எல்லைப் பகுதியான வங்கக்கடல் தனது திசையை மாற்றி கிழக்கு மேற்காக சற்றே வளைந்து செல்கிறது. இப்பகுதி ‘பாயிண்ட் காலிமர்’ என்று அழைக்கப்படுகிறது. கோடியக்கரை வன சரணாலயத்தில் பல்வேறு வகையான அரிய மூலிகைகள் காக்கப்பட்டு வருகின்றன. பறவைகள் சர ணாலயம், வன உயிரியல் பாதுகாப்பு மண்டலம், சதுப்பு நிலப்பகுதி, உப்பள பகுதி, வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த உப்பு சத்தியாகிரகம் நடந்த பகுதி என கோடியக்கரை, சுற்றுலா செல்வோர் களுக்கு சிறந்த பகுதியாக விளங்குகிறது. - ஆதி.உதயக்குமார்