districts

img

மாணவர் மன்ற துவக்க விழா: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், செப்.2 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நாகப் பட்டினம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடை பெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கலந்து கொண்டார்.  நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் ‘நெய்தல் இலக்கிய மன்றம்’ என்ற பெயரில் தமிழ் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு  பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப் பாளர்களை மருத்துவம் மற்றும் சுகா தாரப் பணிகள் அமைச்சர் ம.சுப்பிர மணியன் வாழ்த்தினார். இந்நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மீன் வளர்ச்சி கழக தலை வர் என்.கவுதமன், நாகை மாவட்ட ஆட்சி யர் மரு.அருண் தம்புராஜ், தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.