districts

img

காலிப் பணியிடங்களை நிரப்புக!

நாகப்பட்டினம், ஜூன் 21- நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய  மாலை நேர தர்ணா நாகை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

சத்துணவு மையங்களில் இருக்கும் 60  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். தமிழக முதல்வரின்  தேர்தல் கால வாக்குறுதிப்படி, சத்துணவு  ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியத்தையும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழ கன், மாவட்டத் தலைவர் பா.ராணி, மாவட்டப்  பொருளாளர் அந்துவன்சேரல் உள்ளிட்டோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.