நாகப்பட்டினம், டிச.9 - மாண்டஸ் புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. மாண்டஸ் புயல் வெள்ளியன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக நாகூர், நாகை, வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளபள்ளம், ஆற்காட்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலையின் உயரம் அதிகளவு எழுவதால் கடற்கரை யோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுற்றுலாத்தலமான வேளாங் கண்ணியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை எழுவதால், கண்கா ணிப்பு கோபுரங்கள் முழுவதையும் கடல் நீர் சூழ்ந்துள்ளது. காவல்துறையால் விடப்பட்ட எச்சரிக்கையை மீறி ஆபத்தை உண ராமல் சுற்றுலா பயணிகள் சிலர் கட லில் குளித்தும் செல்பி எடுத்தும் வரு கின்றனர். மேலும் மழை பெய்து கொண்டிருப்பதால், மக்கள் கூட்டத் தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலய முகப்பு பகுதி, கடைவீதி, கடற் கரை சாலை ஆகியவை வெறிச்சோடி காணப்படுகின்றன. நாகூர் பட்டினச்சேரி மீனவ கிரா மத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கடற்கரையோரத்தில் கூரை வீடு களில் வசிக்கும் மக்கள் மழை மற்றும் கடல்நீர் உட்புகுவதால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அலையின் அதீத வேகத்தின் காரணமாக கடற்கரை யோரத்தில் உள்ள கூரை வீடுகளில் கடல்நீர் உட்புகுந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள் ளது. இதனால் குடிசை வீடுகளில் வசித்த மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ள னர். கடலோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அரசு அலு வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல்நீர் உட்புகா வண்ணம் ராட்சத கருங்கற்களை கொண்டு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை வைப்ப தாக கண்ணீருடன் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். கடல்நீர் ஊருக்குள் புகுந்த பகுதி களை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.