நாகப்பட்டினம், ஜூன் 29 - பாஜக அரசின் துணையுடன் சிறுபான்மை மக்கள் மீது தொடரும் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே அவுரித்திடலில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நாகப்பட்டினம்-திருவாரூர் மாவட்டங் கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் மாநில குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாதர் சங்க நாகை மாவட்ட பொரு ளாளர் எஸ்.சுபாதேவி முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மத்தியகுழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்ரமணி யன். சிபிஎம் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.சுபாஷ்சந்திரபோஸ், என்.எம்.அபுபக்கர், ஏ.வேணு, எம்.முருகையன், கோவை சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி. கே.என்.முருகானந்தம். பி.கந்தசாமி. கே.ஜி. ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.