districts

img

இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், நவ.24- நாகப்பட்டினம் மாவட்டம் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற பரிசளிப்பு விழாவில் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், மீன் வள பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான வி.பி.நாகைமாலி கலந்து கொண்டார். நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மீன்வள பொறியியல் கல்லூரியில் நாகப்  பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தா ளர்களின், தமிழ் இலக்கியப் பணிகள், தமிழ்த்தொண்டுகளை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வ லர்கள் என அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு கருத்தரங்கம் நடை பெற்றது.  உவமை கவிஞர் சுரதா, சி. இலக்குவ னார், கா.சுப்பிரமணியம் பிள்ளை, அ.ச. ஞானசம்பந்தனார் போன்ற தமிழுக்காக தொண்டாற்றிய பெருமக்களை கவுர விக்கும் விதத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து பெரியார், அண்ணா, காந்தியடிகள், நேரு போன் றோர்க்கு சிறப்பு செய்யும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றன. இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு வகை யான போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகை மாலி, மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் அருண்தம்புராஜ், மீன்  வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் உள் ளிட்டோர் பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினர்.