நாகப்பட்டினம், ஜுன் 1 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாநிலம் தழுவிய கவன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி கலந்து கொண்டார். கொள்முதல் பணியில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய அக விலைப்படி, சரண்டர் ஊதியம் வழங்க வேண்டும். டிஎன்சிஎஸ்சி வசம் உள்ள அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கூடாது. சுமை தூக்கும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகித் தார். சுமைப்பணி மாவட்ட செயலாளர் ஜெயராமன், நாகை மண்டல நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நாகை டிஎன்சி எஸ்சி மண்டல செயலாளர் கார்த்திகே யன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எம்.குருசாமி, சிஐடியு சுமைப்பணி மாவட்ட தலைவர் தமிழரசன், டாஸ்மாக் சிஐடியு மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். உள்ளாட்சித் துறை மாவட்ட செயலாளர் அன்பழகன் நன்றி கூறி னார்.