districts

img

உப்பளங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க கூடாது! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வேதாரண்யம், ஜூன் 5 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த தேத்தாகுடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 26 ஆவது மாவட்ட மாநாடு  நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், விவ சாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிர மணியன்,  சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர்  வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி, விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் ஏ.வேணு, விவசாயிகள் சங்க மாவட்ட  செயலாளர் கோவை சுப்பிரமணியன் மற்றும்  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உப்பளங்களை கார்ப்பரேட் வசம் ஒப்ப டைக்க முயலும் ஒன்றிய அரசின் நடவடிக்கை களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். வேதாரண்யம் அகல ரயில் பாதை  பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் வரும் இந்த காலத்தில்  உரம், இடுபொருட்களை உடனடியாக இருப்பு வைக்க வேண்டும். கூட்டுறவு சங்கங் களில் கடன் கேட்கும் அனைவருக்கும் கடன்  வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டங் கள் குறித்து விவசாயிகள் சங்கத்திற்கு முறைப் படி தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.