districts

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஏப்.21 -  நாகப்பட்டினம் மாவட்டம் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் ஜி. காளிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் பி.செல்வராஜ், போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கணபதி, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னர். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் நிறைவுரை யாற்றினார். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.