நாகப்பட்டினம், நவ.26- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில், 132 பயனாளிகளுக்கு 8 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிட நலத் துறை, சமூக நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்துறை உள்ளிட்ட துறை யின் சார்பில் பயனாளர்களுக்கு மானியத்தில் பொருட்கள் வழங்கப்பட்டன. தாட்கோ மூலம் டிராக்டர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன், வீட்டுக் கடன் வசதி போன்ற உதவிகள் அரசு சார்பில் வழங்கப் பட்டன. மேலும் ரூ.2 கோடியே 40 லட்சம் அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாண வியருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, நாகப்பட்டி னம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன் ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.