districts

img

ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், நவ.4 - பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திறக்கப்பட்டது.  நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர்  ஒன்றியம் கீழ்வேளூர் சட்டமன்றத் திற்கு உட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திறக்கப்பட்டது. இதனை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி விளக்கேற்றி திறந்து  வைத்தார். 5 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட குளிரூட்டும் கொள்கல னில் பால் சேமிக்கப்பட்டு குளிரூட்டப் படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியா ளர் அங்காடி மூலம் பெறப்படுகின்ற பால் இந்த மையத்தில் சேமிக்கப் படுகிறது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப் பட்ட இம்மையத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண் யம் ஆகிய வட்டங்களில் உள்ள கிரா மங்களில் இருந்து பால் சேமிக்கப்பட்டு,  தஞ்சாவூர் மண்டல பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு அங்காடிக்கு அனுப்பப் படும். தற்போது 24 பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தலை ஞாயிறு, வேளாங்கண்ணி, வேதா ரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  பால் பெறப்பட்டு சேமிக்கப்படுகிறது.  பிரதாபராமபுரத்தின் அருகமை ஊராட்சிகளான திருப்பூண்டி, காரப் படாகை, வேட்டைக்காரன் இருப்பு, புதுப் பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ்வரம்,  வேளாங்கண்ணி, கிராமத்து மேடு, பெரியதும்பூர், சின்னதும்பூர், சோழ வித்தியாபுரம் ஆகிய ஊராட்சிகளில் கறவை மாடு  வைத்திருக்கும் விவ சாயிகள் இனி கவலையின்றி கூட்டுறவு  பால் அங்காடி மையத்திற்கு கறந்த பாலை அனுப்பி வைக்கலாம் என  பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாவட்டத்தில் மேலும் புதிய  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மையம் திறக்கப்பட உள்ளதால், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள் ளது.  இந்நிகழ்வில் மாவட்ட மீன் வளர்ச்சி  கழக தலைவர் என்.கௌதமன், மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்பு ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட  னர்.