districts

img

கீழ்வேளூரில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

நாகப்பட்டினம், மார்ச் 5- நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. இக்குழு வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அறிவுறுத்தியது.

மதிப்பீட்டு குழு தலைவர் சாக் கோட்டை க.அன்பழகன் தலைமை யில் எம்எல்ஏக்கள் திருத்தணி. எஸ்.சந்திரன், மயிலம் ச.சிவக்குமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கீழ்வே ளூர் நாகை மாலி, எழும்பூர் பரந்தா மன், மதுரை பூமிநாதன் மற்றும் வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட னர்.

வேளாங்கண்ணியில் பாதாளச் சாக்கடை பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வேளாங்கண்ணியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.17 கோடியில் கட்டப்பட்டு வரும்  தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி கட்டு மானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கட்டுமானப் பணிகள் குறித்தும், சுற்றுலா விரும்பிகள் அதிகம் வருவதால், அதன் தேவையை பூர்த்தி செய்யும்  வகையில் கட்டப்பட்டு வரும் பணி களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட குழுவினர் அறி வுறுத்தினர். தொடர்ந்து வேளாங் கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருவேலங்கடை அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். 

பின்னர் நாகை அக்கரைப் பேட்டையில் ரூ.81 கோடியில் துறை முகம் விரிவாக்கும் செய்யும் பணி களை பார்வையிட்டனர். நம்பி யார் நகரில் ரூ.6.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு கட்டு மானப் பணிகள் குறித்தும், ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு சுற்றுலா மாளிகை கட்டு மானப் பணிகள், சிட்கோ தொழிற்பேட்டை யிலும் ஆய்வு செய்தனர். 

நீர்வளத்துறை சார்பில் ரூ.18 கோடியில் தேவநதி - ஜெக நாதபுரம் சுனாமி குடியிருப்பு அருகே தேவநதி வாய்க்காலின் குறுக்கே கடைமடை ரெகுலேட்டர் கட்டு மானப் பணியை ஆய்வு செய்தனர். 95 சதவீதம் பணிகள் முடிக்கப் பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணி களை விரைந்து முடிக்க அறி வுறுத்தினர்.

வேதாரண்யம் ஆறுகாட்டுத் துறை மீன் இறங்குதளம் கட்டுமானப் பணிகள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு பணிகளையும் சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.