districts

img

தேனி மாவட்ட  கண்காணிப்புக்குழு கூட்டம்

 தேனி, பிப்.21- தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக்கூட்டம் கண்காணிப்புக்குழு தலை வரும், மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் தலை மையில் பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலை வர் க.பிரிதா, துணைத் தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முரு கன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) இராஜராம், மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்  மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,  தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை, உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்  திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

;