districts

img

வைகை அணையிலிருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை  

வைகை அணையிலிருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பதால் 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.  

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து நொடிக்கு மூவாயிரத்து 457 கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையின் 7 மதகுகளில் இருந்தும் உபரிநீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.  மேலும் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் எனத் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

;