districts

img

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி, மே 2- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடை பெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உத வித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல் உள்ளிட்ட 210 மனுக்கள் பெறப்பட்டன.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) என்.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் விமலாராணி, அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;