districts

img

பாசிபடர்ந்த தரைப்பாலத்தில்  விபத்தில் சிக்கும் மக்கள் புதிய பாலம் கட்டக் கோரிக்கை

கடமலைகுண்டு, பிப்.20- தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்திலிருந்து கீழபூசணூத்து செல்லும் சாலையின் குறுக்கே அல்லால் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின்  குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. வருசநாடு பகுதி யில் பெய்த கனமழையின் காரணமாக அல்லால் ஓடை யில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நீர்வரத்து  உள்ளது. இதனால் தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்துள்ளன. தரைப்பாலம் வழியாக இரு சக்கர  வாகனங்கள், ஆட்டோவில் செல்பவர்கள் பாசிகளால் வழுக்கி நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். குறிப் பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. அதிகாரிகள் தரைப்பாலத்தில் வளர்ந்துள்ள பாசி களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் தரைப் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய  பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.