districts

நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

தேனி.பிப்.24- கம்பம் நந்தகோபால் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தலைமை மேலாளராக இருந்து வந்தார்.  அந்த நிறுவனத்தில் பணவு வரவு செலவு சம்பந்தமாக சிக்கல் இருப்பதாக மனைவி ஜெனிதாவிடம் கூறியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை குளித்து விட்டு வருவதாக சென்ற அவர் வெகுநேரமாகியும் அவர் அறையி லிருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த ஜெனிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சிவக்குமார் ஊஞ்சல் சங்கிலியால் தூக்கிலிட்டு சடலமாகக் கிடந்தார். கம்பம் காவல்துறை யினர் விசாரித்தனர்.