districts

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம்

தேனி, ஜுன் 16- வைகை அணையில் சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் மக்களவை  உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தத் திற்கு சிஐடியு தேனி மாவட்டக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தேனி  மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்  திரன் விடுத்துள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது: வைகை அணையில் கடந்த  40 ஆண்டு காலத்திற்கு முன்பிருந்து  வைகை அணை பூங்காக்களில் சுற்றுலா பயணிகளுக்கான தின் பண்டங்கள், குடிநீர், இளநீர், ஐஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகி றார்கள். துவக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு கட்டணமாக ரூ.5 மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை  செலுத்தி வந்தார்கள். அந்த கட்ட ணம் படிப்படியாக உயர்ந்து இந்த வருடம் ரூ.9000- என்ற நிலையில் செலுத்தி இருக்கிறார்கள்.

விடு முறை நாட்களை நம்பியே இவர்  களது வாழ்க்கை . இவர்கள் அனை வரும் சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் வைகை அணைக்கு புதிதாக வந்துள்ள உதவி செயற்பொறியாளர், புதிய கடைகள் 10-க்கும் மேல் அனுமதி வழங்க ஏற்பாடு செய்துவிட்டார். இதை அறிந்து சிஐடியு சங்கம்  சார்பில் பல முறை பேசியும் அணை யின் எஸ்.டி.ஒ புது கடைகளை அனு மதித்தே தீருவேன் என அடம் பிடித்  தார்.

ஜூன் 15 ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என கூறி விட்டு, பேச்சுவார்த்தையின் போது  புதிய கடை அனுமதி பெற்ற 10 பேர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மோதலை உரு வாக்க முயற்சி செய்தார் புதிய கடைகளை அனுமதிக்க முடியாது எனக் கூறி எஸ்டிஓ (STO) அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தை நடத்தினர்.  போராட்டம் நடந்து கொண்டி ருக்கும் போதே சிஐடியு, விவசாயி கள் சங்க தலைவர்கள், மதுரை கண்காணிப்பு பொறியாளரிடம் போனில் முறையிட்டார்கள். அவ ரும் தலையிடுவதாக கூறினார். அதற்கு பின் எஸ்.டி.ஒ நேரில் தொழி லாளர்களிடம் இன்று முதல் கூடை யில் வைத்து கூவி கூவித்தான் விற்க  வேண்டும். கடைகள் போடுபவர் கள் உள்ளே அனுமதிக்க முடியாது  என்று அலுவலகத்தை விட்டு வெளி யேறிவிட்டார். போராட்டம் தொடர்ந்தது.

 இந்நிலையில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதா னந்தம் கவனத்திற்கு தலைவர்கள் கொண்டு சென்றனர். அவர் உடனடி யாக மதுரை பொதுப்பணித் துறை  கண்காணிப்பு பொறியாளரை தொடர்புகொண்டு உரிய நடவ டிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை கண்கா ணிப்பு பொறியாளர் நேரில் வைகை  அணைக்கு வந்து சாலையோர வியாபாரிகளை சந்தித்து ஒரு வார  காலத்திற்கு முன் என்ன நிலையோ அதுவே இனியும் தொடரும். புதிய  கடைகள் அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொடுத்தார். 40 சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்த திண்டுக்கல் மக்  களவை உறுப்பினர் ஆர். சச்சிதா னந்தத்திற்கு சிஐடியு தேனி மாவட் டக் குழு சார்பிலும், சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலும் நன்றியை தெரிவிக்கி றோம். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.