districts

ஆண்டிபட்டி கண்மாய்களுக்குப் பெரியாற்றுத் தண்ணீர் தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு தொடர் முழக்க போராட்டம்

தேனி, பிப்.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றி யத்தில் உள்ள கண்மாய்களுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்குப் பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்க வலியுறுத்தி ஆண்டிபட்டியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்புச் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி ஒன்றியத்தின் சுற்று வட்டார பகுதிகளான ஏத்தக்கோவில், தெப்  பம்பட்டி, பிச்சம்பட்டி, மறவபட்டி, கதிர்நர சிங்கபுரம் உள்ளிட்ட 35 ஊராட்சிகளில் 162 கிராமங்களில் உள்ள 18 கண்மாய்கள் 150 சிறுகுளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளது. போதுமான மழை பெய்தாலும் நீரை தேக்க வழிவகைச் செய்யாத கார ணத்தால் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதி வறட்சியாகவே உள்ளது. இதைப் போக்க முல்லை பெரியாற்றிலிருந்து உபரி  நீரைக் குழாய்கள் மூலம் கொண்டு வந்து கண்மாய்களில் நிரப்பிப் பாசன வசதி அளிக்க வேண்டும் என ஆண்டிபட்டி பகுதி  விவசாயிகள் பல ஆண்டுகளாக வலி யுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி ஒன்றிய  பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு முல் லைப் பெரியாற்றிலிருந்து உபரிநீர்‌ கொண்டு  வரும் திட்டத்திற்குச் சட்டமன்ற பட்ஜெட்  கூட்டத்தில் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்தி அனைத்து விவசாயச் சங்க கூட்டமைப்பி னர் தொடர் முழக்க போராட்டம் நடத்தி னர். போராட்டத்திற்கு ஆண்டிப்பட்டி அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு தலைவர் எஸ்.சுரேஷ், செயலாளர் கே.தயாளன், பொருளாளர் சி ரகுநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், விவசாயிகள் சங்க  மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், வெங்க டேசன், ஒன்றியக் கவுன்சிலர் மறவபட்டி பிரபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜ தானி பழனிச்சாமி, கோத்தலூத்துச் சண் முகம், எஸ்.எஸ்.புரம் சுப்புராஜ், மற்றும் பி.ராமன், தங்கவேல், காரணமூர்த்தி, ரவி, சுப்பையா, முருகன், தண்டபாணி, சின்  னப்பா, மஞ்சு பழனிச்சாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் மா.தங்கராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.