districts

img

கொலைக் கருவி அல்ல டிராக்டர் அரசியல் சாசனத்தை தேனி எஸ்.பி. படிக்க வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு

தேனி ,பிப்.15- டிராக்டர் கொலை கருவி இல்லை. இந்திய தண்டனை சட் டத்தை மட்டும் படிக்கக் கூடாது. அர சியல் சாசனத்தையும்  தேனி போலீஸ் எஸ். பி படிக்க வேண்டும் என்று  தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண் முகம் கூறினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஜனவரி 26 ஆம் தேதி டிராக்  டர், இருசக்கர வாகன  பேரணி நடத்தி யதற்கு வழக்கு பதிவு செய்த காவல்  துறையினரை கண்டித்தும் வழக்  கினை திரும்பப்பெற வலியுறுத்தி யும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பிப்ரவரி 15 புதனன்று ஆர்ப்  பாட்டம்  நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்  திற்கு ஐக்கிய விவசாயிகள் முன் னணி மாவட்ட அமைப்பாளர் டி. கண்ணன் தலைமை வகித்தார் .  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் பெ.சண்முகம் ,சிபிஐ  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன்,   ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநி லச் செயலாளர் ஆர்.மேரி லில்லிபாய்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில தலைவர் பெ. சண்முகம் பேசுகையில்,   கடந்த அதி முக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்  வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது லட்சக்கணக் கான பொய் வழக்குகள் போடப் பட்டன.

திமுக ஆட்சிக்கு  பின் அதி முக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு களை  எல்லாம் வாபஸ் பெறுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார் .அதனை நாங்கள் வரவேற்கிறோம். தற் போது முந்தைய ஆட்சியில்  நடந் ததை போன்று பாதிக்கப்பட்ட விவ சாயிகள் முதல்  அரசு ஊழியர் வரை அதிகமாக இப்போது போராடு கிறார்கள். காவல்துறையினரிடம் அனுமதி கேட்டால் ,அனுமதி ரத்து என்று சொல்கிறார்கள் . இந்திய அர சியல் சாசன பிரிவு 19 பல்வேறு உரி மைகளை வழங்கியுள்ளது.மாவட்ட காவல் கனகண்காணிப்பாளரே இந் திய தண்டனை சட்டத்தை மட்டும் படிக்காதீர், இந்திய அரசியல் சாச னத்தையும் படியுங்கள்.  டிராக்டர் எடுத்துக்கொண்டு ஊர்வலம் போகக்கூடாது என்றால் என்ன? அது தான் விவசாயிகளின்  அடையா ளம். உழவு செய்கிற கருவி தான். டிராக்டர் கொலை கருவி இல்லை. போராட்டம் நடத்த அனுமதி கேட்  டால் மறுக்கும் போது ஏன் அனுமதி கேட்க வேண்டும் என்ற கேள்வி எழு கிறது. நான் தமிழக காவல்துறை தலைவரை கேட்டுக்கொள்வது , 32  சிட்டி ஆக்ட் இருக்கு என்கிறீர்கள், தேனி மாவட்ட எஸ்.பி.யின் அணுகு முறை என்பது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கினை திரும்ப பெற வேண்டும். துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர், காவல்துறை அதிகாரிகளை அழைத்து  பேசி ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் . என்றார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-(சி.பி.ஐ)மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி பேசுகையில்,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,   பாஜகவிற்கு ஆதரவாக  இருக்கிறார்.  

மற்ற மாவட்டங்களில்  அரசு வழி காட்டல் படி தமிழ்நாடு முழுவதும்  டிராக்டர் எண்ணிக்கையை  குறைத்  துக் கொள்ளுங்கள் என்றனர். அதன்  படி குறைத்துக் கொண்டனர். தேனி  மாவட்டத்தில் வழக்கு பதிவு செய் துள்ளனர் . இதனை  ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் வண்மை யாக கண்டிக்கிறோம். இப்படிப்பட்ட கண்காணிப்பாளரை பணிமாறுதல் செய்தால் கூட்டணியான திமுக அரசு விவசாயிகளுக்கான அரசு என்று நம்புவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கதின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,விவ சாயத்தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,சிஐ டியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் ,மாதர் சங்க மாவட்ட  தலைவர் எஸ்.மீனா ,சிபிஐ விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் , டி.பாண்டி ,மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன் , கே .செல்வராஜ் ,எஸ்யுசிஐ நிர்வாகி ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.