districts

img

வர்க்க அணி திரட்டலே வெற்றியை தரும் வெண்மணி நினைவுதின கருத்தரங்கில் பெ.சண்முகம் பேச்சு

சென்னை, டிச. 29 - வர்க்க ரீதியான அணி திரட்டலே வெற்றியை தரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார். வெண்மணி நினைவு தினத்தையொட்டி கட்சி யின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் புத னன்று (டிச.28) எம்ஜிஆர் நகரில் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்த ரங்கில்  பெ.சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு: 2022ம் ஆண்டில் புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில், தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கும் கொடுமை அரங்கேறி இருக்கிறது. தீண்டாமை கொடுமை குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட வாட்ஸ்ஆப் எண்ணில்4மணிநேரத்தில் 25 புகார்கள் பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நீசத்தன மான நிலப்பிரபுத்துவ கொடுமை கோலோச்சு கிறது. இதனை எதிர்த்து களம் காண வேண்டிய கடமை நமக்குள்ளது. இந்த பின்புலத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெண்மணியில், நிலமற்ற, வீடற்ற, ஆடு, மாடு, கோழி கூட வளர்க்க உரிமையற்ற பண்ணை அடிமைகளை அணி திரட்டியது செங்கொடி இயக்கம். சாதி, நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் முது கெலும்பை உடைத்தது. இதனால்தான், தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட கீழதஞ்சையில் சாதிய கொடுமைகள் குறைவாக உள்ளது. கூலி உயர்வு கேட்ட தற்காக மட்டுமல்ல, செங்கொடியை இறக்க மறுத்ததற்காக ஏராள மான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல கிராமங்களில் குடிசைகள் கொளுத்தப்பட்டன; பிரித்து எறியப்பட்டன. இதன் உச்சமாக வெண்மணியில் ஒரே குடிசைக்குள் 64 பேர் தீ வைத்து கொளுத்தப் பட்டனர்.

அன்றைக்கிருந்த அரசு, நிர்வாகம், நிலப் பிரபுக்கள், காவல்துறை, வருவாய்த்துறை, நீதித் துறை ஒன்றிணைந்து சதி செய்து குற்றவாளிகளை காப்பாற்றியது. பொருளாதார ரீதி யாக சுரண்டப்படும் பிற்படுத்தப் பட்ட மக்களையும், சமூக ரீதி யாக சுரண்டப்பட்ட பட்டி யல் சாதி மக்களையும் வர்க்க ரீதியாக செங்கொடி இயக்கம் திரட்டி போராடிய தால்தான், கீழதஞ்சையில் சாதி ஆதிக்கத்தை ஒழிக்க முடிந்தது. தலித் மக்களின் பிரச்  சனைகளை தலித்துகளால் மட்டுமே உணர முடியும். அவர்களுக்கான விடு தலையை அவர்களேதான் போராடி பெற முடியும் என்று அடையாள அரசி யல் செய்கின்றனர். இதற்கு நேர்மாறானது நமது அனுபவம். சாதிய ஆதிக்கம் மோச மாக உள்ள உ.பி., அரி யானா போன்ற மாநிலங்க ளில் அனைத்து சாதியின ரும் பங்கேற்கும் மகா பஞ்சாயத்துகள் கூடி தீர்மானம் போட்டதும், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றது.  சாதிய ரீதியாக மட்டும் அணி திரட்டல்  நடந்திருந்தால் அந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா? வர்க்க அணித் திரட்டலே வெற்றியை தரும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துச்செல்வோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமை தாங்கி னார். விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ரெங்கசாமி உள்ளிட் டோர் பேசினர்.