districts

சார்நிலை கருவூல அலுவலர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

தேனி, மார்ச் 1-  உத்தமபாளையம் கருவூல அலு வலகத்தில் ஓய்வூதியர் நிதியில் கை யாடல் செய்த சார்நிலை கருவூல அலு வலர், உதவி கருவூல அலுவலர்கள் என 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்கிழமை, தேனி நீதித் துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்ட கருவூல அலுவல கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மாவட்ட கருவூல அலுவலராக பணியாற்றியவர் அனுஜா. இவர், உத்தமபாளையம் சார்  நிலை கருவூல அலுவலகத்தில் கடந்த  2012 ஆம்ஆண்டு முதல் 2015 ஆம்  ஆண்டு வரை, சார்நிலை கருவூல அலு வலராக பணியாற்றிய கார்த்திகேயன், உதவி கருவூல அலுவலர்களாக பணி யாற்றிய அமலரசு, முரளி ஆகியோர் கூட்டாக போலியாக கணக்கீட்டுத் தாள்  தயாரித்து ஓய்வூதியதாரர் நிதி மொத்தம் ரூ.54 லட்சத்து 91 ஆயிரத்து 429 ஐ கையாடல் செய்திருப்பது தணிக்  கையில் தெரிய வந்தததாக கடந்த 2016  ஆம் ஆண்டு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகார்  அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.  இந்த வழக்கு விசாரணை தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி லலிதாராணி, நிதி கையாடலில் ஈடு பட்ட கார்த்திகேயன்,அமலரசு, முரளி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.21 ஆயிரம் அப ராதம் விதித்து தீர்ப்பளித்தார்.