districts

img

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பலி  

தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் சுமார் 60 ஆண்டுகளாக பழமையான வீட்டின் மேற்கூரை, தீடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தூத்துக்குடி அண்ணாநகர் 3ஆவது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன் மனைவி காளியம்மாள் தம்பதியினர். இவர்களது கர்ப்பிணியான மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா 7 மாத கர்ப்பிணி என்பதால், கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.  

இந்நிலையில் இன்று வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய கர்ப்பிணி மகள் மற்றும் தாய் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் முத்துராமன் காயங்களுடன் உயிர் தப்பினார்.    

இதுகுறித்து சம்பவம் அறிந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.