districts

img

இன்றைய தேவை நிவாரணமும் உதவியுமே!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிவாரண உதவி களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழு வதும் ஊழியர்களிடம் நிதியை திர‌ட்டி பல்வேறு உதவி களை அவர்களுடன் இணைந்து நானும் பங்கெடுத்து வழங்கியுள்ளேன். இந்த பேரிடரில் இருந்து மக்கள் அனைவரும் மீள்வதற்கு அரசு மற்றும் ஒட்டுமொத்த அனைவரும் தங்களது பங்களிப்பை செய்தால் தான் வாழ்வாதாரங்களை பேரளவுக்கு இழந்திருக்கிற மக்கள்  மீள முடியும். இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு எவ்வாறு உதவுவது ,இந்த துயரத்தில் இருந்து மீள்வது   எப்படி என சிந்திக்க வேண்டும், பங்களிப்பு செலுத்த வேண்டும். ஆனால் இவற்றை முற்றிலும் திசை திருப்பும்  வேலையை  ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

குற்றச்சாட்டு உங்களை நோக்கியும் திரும்பும்
ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்றைய தினம்(வெள்ளியன்று) அளித்த பேட்டி என்பது மிக பெரிய காயத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது. நிதியமைச்சர் அவர்கள் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள‌ தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு ஆறுதலாக ஆதரவாக எவ்வளவு தூரம் பங்களிப்பு செலுத்த முடியும் என்பதை பேசுவதை விட்டு விட்டு வம்புச் சண்டைக்கு இழுப்பது போல, ஒரு பகைமை யை எப்படி கையாளுவது என்பதற்கு உதாரணமாக அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தி உள்ளார்.  அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் பதில்  சொல்ல முடியும். ஆனால் அதுவல்ல இன்றைய தேவை.  இன்றைய தேவை என்பது மக்களுக்கான நிவாரணம், மக்கள் மீள்வதற்கான‌ உதவிகளும் தான்.

தமிழக அரசின் மீது ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் 12ஆம் தேதியே  அகில இந்திய வானியல் துறை முறையான அறிவிப்பை செய்து விட்டது. ஆனால்  16, 17 ,18 ஆம் தேதிய வெள்ளத்திற்கு தகுந்த முன்னேற் பாடு தமிழக அரசு செய்யவில்லை. எனவே இந்த பேரிடர் தமிழக அரசு அணுகுமுறையும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கை எடுக்காதததும் காரணம் என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது மிக மிக அபத்தமானது மிக தவறானது,  இந்த குற்றச்சாட்டை நீங்கள் தமிழக அரசின் மீது சுமத்தினால் அதே குற்றச்சாட்டு உங்களை நோக்கியும் திரும்பும்.

முதலில் பதில் சொல்ல வேண்டியது பிரதமரே!
ஏனென்றால் முதலில் வானிலை துறை மிக அதிக கன மழை பெய்யும் என்று அறிவிப்பை தான் செய்தது.  தவிர‌ நூறு சென்டிமீட்டர் அளவுக்கான கன மழை  பெய்யும் என்று முன்னெச்சரிக்கை யாரும் செய்ய வில்லை. அதனால் தான் எந்த 17 ஆம் தேதி காலை அதிக கன‌ மழை இந்த நான்கு மாவட்டங்களில் துவங்கி கொட்டிக் கொண்டிருந்தபோது 17ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கன்னியாகுமரி முதல் காசிக்கான காசி தமிழ் சங்கம் ரயிலை காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். 

கன்னியாகுமரியில் இருந்து அன்றைய தினம் மாலை 6:15 புறப்படுகிறது அங்கு காலையிலிருந்து கனமழை கொட்டி இருந்தபோது ரயிலை துவக்கி வைக்கிறார் பிரதமர்.  வானிலை துறை அறிக்கை பிரதமருக்கு தெரியாதா? ஒன்றிய அரசுக்கு தெரியாதா? கொட்டுகிற பேய்மழையில் ஒரு  ரயில் பயணத்தை எப்படி துவக்கி வைக்க முடியும்? அதுமட்டுமின்றி அன்றைக்கு அந்த நிகழ்ச்சி இருந்ததால் தான் தென் மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்ய முடியவில்லை என பல அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால் தான் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆறு மணிக்கு புறப்பட்டது. மாநில அரசின் மீது நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு உண்மையென்றால் இதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டியது இந்திய நாட்டின் பிரதமர் தான். வானிலை துறை அறிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு ரயில் பயணத்தை  ரயில் துவக்க நிகழ்ச்சியினை அன்றைய தினம் கொட்டுகிற பெருமழையில் நடத்தியதற்கு, தென் மாவட்டங்களில் பல ரயில்கள் ரத்து செய்ய முடியாததற்கு காரணம் பிரதமர்.

தமிழகத்துக்கு ஏன் இவ்வளவு பாரபட்சம்?
ஒரு பேரிடர் களத்தில் வந்து திசை திருப்பும் ஒன்றிய நிதி அமைச்சர், பேரிடர் களத்தில் நின்று கொண்டிருக்கிற  தவிக்கும் மக்களுக்கு அற்ப அரசியல் செய்வதை கைவிட வேண்டும். இப்பொழுது தேவை தமிழ்நாட்டிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி. அந்த நிதியை ஒன்றிய  அரசாங்கம் உடனடியாக கொடுக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி குஜராத்தில் புயல்  வீசிய இரண்டே நாட்களில் 19ஆம் தேதி களத்திற்கு போனார் பிரதமர் மோடி அவர்கள், பின்னர் 21ஆம் தேதி  உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

\ஆனால் தமிழகத்திற்கு வருத்தம் தெரிவிக்க அறிக்கை விடுவதற்கு ஆறு நாள் ஆகிவிட்டது. 4, 5 ஆம் தேதி சென்னையில் புயல் வீசி மொத்த சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் 6ஆம் தேதி நெட் எக்ஸாமை ஒன்றியத்துறை நடத்தியது. தமிழ்நாடு என்றால் ஏன் இவ்வளவு பாரபட்சம் என்ற கேள்வி எல்லாரும் கேட்க விரும்புகின்றோம். தயவு செய்து இப்பொழுது தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை பேரிடர் நிவாரண நிதியை வழங்குங்கள். மற்ற அரசியல் பேச்சுகளை எல்லாம், விவாதங்களை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நிதியமைச்சரின் அறியாமை
ஒன்றிய நிதி அமைச்சர் போதிய விவரம் இல்லாமல் பேசுவது எல்லாவற்றையும் ஆளுங்கட்சிக்கு எதிராக திருப்ப வேண்டும் என்ற மனநிலையில் மட்டுமே பேசுவது  ஒரு நிதியமைச்சருக்கான‌ பேச்சு அல்ல. சுனாமிக்கு பிறகு தான் பேரிடர் மேலாண்மை சட்டமுறை கொண்டு வரப்பட்டது. பேரிடர் நிதியே உருவாக்கப்பட்டது. சுனாமியின் அனுபவம் கற்றுக் கொடுத்தது. எத்தனை ஆயிரம் மக்களை கொன்ற இயற்கை சீற்றங்களை, அதற்கு பின்பு அந்த சீற்றத்தின் பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என்பதை யோசித்து, அதற்கு பிறகு தான் அரசு அந்த சட்டங்களை உருவாக்கியது. எனவே இன்றைக்கு ஏற் பட்டுள்ள பாதிப்பை ஒப்பிட்டு நிதியமைச்சர், நாங்கள் சுனாமிக்கே தேசிய‌ பேரிடராக அறிவிக்க வில்லை என்று சொல்வது அவரின் அறியாமையாகும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.