தூத்துக்குடி, ஜூன் 16- என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் கோரிக்கை தொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல்மின் கிளை சார்பாக கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி காத்தி ருக்கும் போராட்டம் 14 ஆம் தேதி அன்று காலை என்டிபிஎல் அனல் மின் நிலைய முன்பாக துவங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளான ஜூன்15 புதனன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சி யர் உத்தரவின்பெயரில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமை யில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலு வலகத்தில் சமாதான கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் என்டிபிஎல் நிர்வா கம் சார்பில் மனிதவள மேம்பாட்டு பொது மேலாளர் சுப்பிரமணியன், இணை பொது மேலாளர் செல்வம் ஜேக்கப், ஜவகர் ஆகியோரும் சிஐ டியு சார்பாக என்டிபிஎல் செயலாளர் எஸ்.அப்பாத்துரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் ஆர்.பேச்சிமுத்து, தெர்மல் செயலாளர் கணபதி சுரேஷ் மற்றும் தெர்மல் காவல் ஆய்வாளர், வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் ஏற்கனவே தொழிலாளர் துறை இணை ஆணை யர் வழங்கிய சம வேலைக்கு சம ஊதியம் தீர்ப்பில் சென்னை உயர் நீதி மன்றம் வழங்கும் மேல்முறையீட்டு தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாகவும் இடைக்கால தீர்ப்பு முடிவையும் அமல் படுத்திடவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தோழர்கள் மீண் டும் மண்டல இணை ஆணையர் சம ரசப் பேச்சுவார்த்தையின் படி வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்றும், என்டி பிஎல் சூப்பர்வைசர் மற்றும் பொறி யாளர்களுக்கு சட்ட அடிப்படையில் பிஎப் பிடித்தம் செய்யப்படும் மற்றும் மிகை நேர பணி செய்யும் சூப்பர் வைசர்களுக்கு ஊதியத்துடன் பணப் பயன் வழங்கப்படும் என்றும் முதலு தவி வசதிகள் கூடுதலாக செய்யப் படும். மருத்துவ முதலுதவி பெட்டி கூடுதலாக நிறுவப்படும் மற்றும் பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும், காத்திருக்கும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தொழிலாளர்கள் மீதும் பழி வாங்கும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்படாது என்றும், மேலும் தொழில் உறவு பேணிப் பாதுகாக்கப் படும் எனவும் இதர கோரிக்கைகள் பேசி தீர்வு காணப்படும் எனவும் உடன்பாடு ஏற்பட்டது.