தூத்துக்குடி, நவ. 29 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரு கிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை யும், ஒரு சில இடங்களில் பரவலான மழை யும் பெய்தது. இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாயன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதிகாலை முதலே மழை பெய்து வருவதாலும், கனமழை எச்சரிக்கையாலும் மாணவர்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாயன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலை யம் சேறும் சகதியுமாக மாறியது. இத னால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் கோவில் பட்டி, கயத்தாறு, குலசேகரன்பட்டினம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், திருச்செந் தூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பட்சமாக கயத்தாறில் 27 மில்லிமீட்டர், கடம்பூரில் 11 மில்லிமீட்டர், திருச்செந்தூ ரில் 10 மில்லிமீட்டர், தூத்துக்குடியில் 8 மில்லிமீட்டர் மற்றும் காயல்பட்டினம், கோவில்பட்டி, சூரன்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது.