தூத்துக்குடி, ஆக.13- தூத்துக்குடியில் இன்சூரன்ஸ் இழப்பீடு கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற் wது. ரூ.170.56 கோடி இழப்பீடு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விவ சாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு ஆக.12திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நூறு சத விகிதம் இழப்பீடு வழங்கக் கோரி யும், மாநில அரசு அறிவித்த இழப்பீடு ஒரு பகுதியினருக்கு இதுவரை கிடைக்கவில்லை; அவர்களுக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும், இன்சூ ரன்ஸ் கம்பெனியை அரசு எடுத்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக் கான விவசாயிகள் ஈடுபட்டனர்.
துவக்கத்தில் காவல்துறை யினர் விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வில்லை. பின்னர் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நேரில் வந்து மனுவை பெற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். போராட்டத்தில் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வேளாண் துறை அதிகாரிகள் நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
அதேபோல் போராட்டத்தின் விளைவாக இஃப்கோ டோக்கி யோ என்கின்ற நிறுவனம் தூத்துக் குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை அறிவித்தார்கள். அதன்படி ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 980 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்த 34,228 விவசாயிகளுக்கு சுமார் 61 கோடியை 21 லட்சம் ரூபாய் இழப்பீடும், 29,802 ஏக்கர் பரப்பளவில் பாசிப்பயிறு சாகுபடி செய்த 11,901 விவசாயிகளுக்கு 17 கோடியே 36 லட்சம் இழப்பீடும், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயி களுக்கு 92 கோடி இழப்பீடும் என மூன்று பயிர்களுக்கும் சுமார் 170 கோடியே 56 லட்சம் இழப்பீடு தொகை வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் எனவும், மீதமுள்ள இதர சாகுபடி பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் வேளாண்மைத் துறை அதிகாரி கள் நேரில் வந்து தெரிவித்தனர்.
டி.ரவீந்திரன்
இது தொடர்பாக விவசாய சங்க அகில இந்திய துணைச் செயலா ளர் டி.ரவீந்திரன் பத்திரிகையாளர்க ளிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.37,000 கோடி இழப்பீடு கேட்டது. ஆனால் சொற்பத்தொகையை மட்டுமே கொடுத்துவிட்டு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகம் இழைத்தது, பேரி டர் பாதிப்பு என்று அறிவிக்கக் கூறியும் அப்படி அறிவிக்க முடி யாது என்று மறுத்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூன்று இன்சூரன்ஸ் நிறுவனம் 3 பயிர்களுக்கான இழப்பீடு தொ கையாக 170.56 கோடி அறிவித்துள் ளார்கள். இது விவசாயிகள் போ ராட்டத்தின் கிடைத்த வெற்றி ஆகும். இதே போன்று இதர அழிந்து போன சாகுபடி பயிர்க ளுக்கு இழப்பீட்டை வழங்குவ தற்கு ஒன்றிய பாஜக அரசு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை போன்று திருநெல்வேலி, தென் காசி உள்ளிட்ட மாவட்டங்களும் கனமழை பெருவெள்ளத்தால் கடும் சேதம் அடைந்த மாவட் டங்கள் அந்த மாவட்ட விவசாயிக ளுக்கு பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கும் 100 சதவிகிதம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கிட ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் டி.ரவீந்திரன், சிபி எம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் பா.புவி ராஜ், தலைவர் இராகவன், பொருளாளர் எஸ். நம்பி ராஜன், மாவட்ட நிர்வாகி கள் சீனிவாசன், ஐ.கணபதி, ஏ.பால கிருஷ்ணன், நடராஜன், பி.மணி, எஸ்.செல்வராஜ், ஜி.ராமசுப்பு, கிரேசி பாலம்மாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.