districts

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு 630 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி, நவ.13- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 யூனிட்டு களில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத் தப்பட்டுள்ளது.  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 5 யூனிட்டுகள் உள்ளன. இதன்மூலம் நாள் தோறும் 1,050 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில், 3, 4, 5 ஆகிய 3 யூனிட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்  உற்பத்தி தடைபட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்  பாடு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள தாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரி வித்தன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, இங்கு 40 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. தற்போது காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போதுமான அளவு கிடைக்கிறது. சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்திலிருந்து வந்த தகவலின்பேரில் இங்கு 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. 2 யூனிட்டுகளில் உற்பத்தி நடை பெறுகிறது என்றனர்.