districts

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஜூலை 1 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம்

தூத்துக்குடி, ஜூன் 25- மதுரை - செங்கோட்டை, திருநெல்வேலி - செங்கோட்டை மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்க ளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. ‘‘மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதி வில்லாத சிறப்பு ரயில்: மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லி புத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி - செங்கோட்டை - திரு நெல்வேலி பகுதிக்கு இரண்டு ஜோடி சிறப்பு  விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதன்படி திருநெல்வேலி செங்கோட்டை முன்பதி வில்லா சிறப்பு ரயில் (06681) திருநெல்வேலி யிலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு திருநெல் வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - திரு நெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு திரு நெல்வேலி வந்து சேரும்.

இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திரு நெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்கள் திருநெல் வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக் குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பா சமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்தி ரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு  ரயில்: திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதி வில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்தூரி லிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந் தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந் தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல் பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினா விளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவை குண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும்’’ என தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.