districts

img

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன கேத்லேப் கருவி திறப்பு

திருவாரூர், மார்ச் 5 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.5 கோடியில் எம்.ஆர்.ஐ, ரூ.8.45 கோடி யில் கேத்லேப் (ஆஞ்சியோகிராம்) சிறப்பு சிகிச்சை மற்றும் நவீன உபகரணங் களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார்.  

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். நாகை  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணி யன் முன்னிலை வகித்தனர்.

பின்பு மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  தெரிவித்ததாவது:

 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று மாரடைப்பு பாதிப்புக்கு உள்ளான வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகை யில், ரூ.8.45 கோடியில், டெல்டா மாவட்டங்களிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கேத் லேப் கருவி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களாக மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது. இது குறித்து இதயத்துறை மருத்துவர்களி டம், அதற்கான ஆராய்ச்சியை மேற் கொள்ள கூறியுள்ளோம். பன்னாட்டு சுகாதாரத் துறை கருத்தரங்கிலும் இக்கருத்து குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

அதேபோன்று, ரூ.8.5 மதிப்பீட்டில் எம்ஆர்ஜ ஸ்கேன் கருவியும் அமைக்கப் பட்டுள்ளது. இக்கருவி, மூளை, தண்டு வடம் போன்ற பல்வேறு உறுப்புகளில் உள்ள நோயின் தன்மையினை காணப் பயன்படுகிறது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் தனியார் இடத்தில் எடுத்தால் விலை அதிகம். அரசு மருத்துவமனையில் எடுத்தால் விலை மிக குறைவு. ஆனால் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதனை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி மருத்து வக் கல்லூரிக்கு தேவையான வசதி களை கருத்தில் கொண்டு, அதற்கான வசதிகளும் உடனுக்குடன் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.34 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் 47 புதிய துணை சுகாதார மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்டத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மிகப்பெரிய அளவில் முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, கொரடாச்சேரி வட்டாரத் தில் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி  உதவித்திட்டத்தின்கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக மும் மற்றும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்து வப் பெட்டகத்தையும் வழங்கினார்.